Wednesday, November 29, 2017

வலம்புரி சங்கு:


வலம்புரி சங்கு:
பல நாட்கள் தேடலுக்கு பின்னர்,மிக மிக அரிதாக கிடைக்ககூடிய இந்தியன் வலம்புரி சங்கு 2 மட்டும் கிடைத்துள்ளது.
சகல செல்வங்களையும்,ஐஸ்வர்யங்களையும் தந்து அருள்பவை வலம்புரி சங்கு.இது மகாலட்சுமியின் அம்சமாகும்.
இந்தியன் வலம்புரி சங்கு தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

ஒன்பது முக ருத்ராட்சம்:


ஒன்பது முக ருத்ராட்சம்:
ஒன்பது முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் கேது பகவான்.இது அன்னை பராசக்தி,அத்யா சக்தியாகிய நவதுர்க்கை,நவகாளியின் அம்சமாகும்.இதனை அணிவோருக்கு வாழ்க்கையின் வெற்றிக்கான சக்தி,ஆற்றல்,செயல் திறமை கிடைக்கும்.மேலும் நிதானம்,பொறுமை கிடைக்கும்.பலமொழி பேச்சு,இலக்கண இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு பன்முக வளர்ச்சி உண்டாகும்.
மேலும் பயஉணர்வு,அச்சம்,எதிர்மறை எண்ணங்கள் நீங்கி பராசக்தியின் பரிபூர்ண அருள் கிட்டும்.சிவனை வழிபடுவர்களுக்கு 5 முக ருத்ராட்சம் எப்படியோ,அதேபோல் சக்தியை வழிபடுவர்களுக்கு 9 முக ருத்ராட்சம் தான் சிறப்பானவை.
அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரக்காரர்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம் இது.
ஒன்பது முக ருத்ராட்சம் அரிதானவை,இதை அணிவோருக்கு சகல நன்மைகளும் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

கடன் தொல்லையிலிருந்து விடுபட


கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.
கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.
தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்


கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்
"ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி
ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா"
பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு
மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து
மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம்
செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின்
சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.
இதே போல்இம்மந்திரத்தை பாதம்பிசினை உழுந்தளவில் உருட்டி
இடதுகையில் வைத்துக்கொண்டு மன ஓர் நிலையோடு மந்திரத்தை
32 உரு செபித்து சொன்னபடி கேட்காத பிள்ளைகளுக்கு பாலில் கலந்து
கொடுக்க உன் சொல்கேட்கும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, November 28, 2017

தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
ராமர் கணையாழி
ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.
பிள்ளையார் சுழி
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது.
நட்சத்திர பாகங்கள்
அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.
* அசுவினி, பரணி, கிருத்திகை - நெற்றி.
* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை - முகப்பகுதி.
* புனர்பூசம், பூசம் - இரு தோள்கள்.
* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் - மார்பு பகுதி.
* சித்திரை - வயிற்று பகுதி.
* சுவாதி, விசாகம் - புஜங்கள்.
* அனுசம் - உடலின் மைய பகுதி.
* கேட்டை, மூலம் - இரண்டு கைகள்.
* பூராடம், உத்திராடம் - இரண்டு தொடைகள்.
* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - கால் பாதங்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
* கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
பலன்கள்:
1] வீட்டில் வாஸ்து தோஷம் விலக மற்றும் திருஷ்டிகள்,துஷ்ட சக்திகள் அணுகாதிருக்க,11 கோமதி சக்கரம் சங்கை துணியில் கட்டி வாசற்படியில் கட்ட பலன் கிடைக்கும்.
2] பணம் வரவு உண்டாக:
13 கோமதி சக்கர சங்கை சிகப்பு துணியில் கட்டி ஈசானிய மூலை அல்லது கல்லாப் பெட்டியில் வைக்க பணம் வரவு பெருகும்.சேமிப்பு உண்டாகும்.
3]தெய்வ வசியம்,தொழில் வசியம் உண்டாக:
15 கோமதி சங்கை வீடு/தொழிலங்களில் வைத்து பூஜிக்க தெய்வ கடாட்சம் உண்டாகி தொழில் வியாபார விருத்தி உண்டாகும்.தொழில் வளம் பெருகும்.உடல் நோய்கள்,கால சர்ப்ப தோஷம் விலகும்.
பூஜித்த கோமதி சக்கரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, November 21, 2017

சக்தி வசியம்


சக்தி வசியம்:
பூச நட்சத்திரம் வரும் வெள்ளிகிழமை தினத்தில் விஷ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜை செய்து வேர் அறாமல் பிடுங்கி குளிசத்தில்(தாயத்தில்) அடைத்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரத்தை 1008 உரு கொடுத்து குளிசத்தை கட்டிகொள்ள ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, பூதம் எல்லாம் விலகும்.
சக்தி மூல மந்திரம்
ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா.
Note:குளிசம் என்பது தாயத்து ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

சாளக்கிராமம் கல்

சாளக்கிராமம் கல் :
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். "என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள்.
அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.
அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.
இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்" என்றார். "யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார் சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..? மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.
சாளக்கிராமம் கல் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Sunday, November 19, 2017

அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க


அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க:
அரசு உத்தியோகத்திற்க்கு முயற்சிப்போர்,அரசு பதவி உயர்வுக்காக காத்திருப்போர்,அரசு காரியங்களில் நன்மை பெற விரும்புவர்கள்,அரசியல்வாதிகள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 ஆரஞ்சு பழங்களை தனித்தனியாக தானம் கொடுக்கவும்.இதனை மதியம் 1-2 மணிக்குள் செய்ய பலன் கிடைக்கும்.பலன் கிடைக்கும் வரை தானம் செய்யவும்.
உத்தியோக வசிய தாயத்து மற்றும் ராஜ வசிய தாயத்துக்கள் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

தன(பணம்) வசிய இரசமணி


தன(பணம்) வசிய இரசமணி:
கிரஹ சாரப்படி,கிரஹ அமைப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் பலருக்கு பண முடக்கம,பண தடைகள்,பண புழக்கமின்மை இருந்து கொண்டே இருக்கும்.
நமது முன்னோர்கள் அதற்காக உருவாக்கியவை தன வசிய ரசமணி ஆகும்.
கருஊமத்தை,வெள்ளை விஷ்ணுகாந்தி போன்ற தன வசிய மூலிகைகள் -17 கொண்டு உருவாக்கப்பட்டவை இது.இதனை அணிய தன வசியமும்,ஆகர்ஷணமும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்:
பழங்காலத்தில் என் முன்னோர்கள் உருவாக்கிய உபாசனை முறை இது.
ஆதிசக்தியின் அம்சமான 
பகவதி அம்மனின் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உருவேற்ற யந்திரம் உயிர் பெறும்.இதற்க்கு முறையாக படையல்கள் இட்டு,குருதி பூசை செய்ய வேண்டும்.
இதற்க்கு முன்பாக மயாண காளிக்கு படையல்கள் இட்டு காளியை ஆகர்ஷண செய்ய வேண்டும்,அதன் பிறகே மந்திர பிரயோகம் செய்ய வேண்டும்.
ஒரு மண்டலம் விரதம் கடைபிடித்து,தீட்சை முறையாக பெற்று,பகவதி தேவியின் யந்திரம் வைத்து பூசை செய்ய வாக்கு சித்தியுண்டாகும்.முக்காலத்தையும் பிறர் ஆச்சிரியப்படும்படி அருள் வாக்கு சொல்லலாம்.குறி சொல்லலாம்.மேலும் பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள்,செய்வினைக் கோளாறுகளை நீக்கலாம்.
அருள் வாக்கு,குறி சொல்ல உருவேற்றிய ஸ்ரீ மலையாள பகவதி யந்திரம்,மை மற்றும் தீட்ஷை வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அனுதினமும் வெற்றி பெற


அனுதினமும் வெற்றி பெற:
சுத்தமான செம்பு டம்ளரில் நீர் ஊற்றி,அதில் டீஸ்பூன் அளவு தேன் கலக்கவும்,கற்கள் எதுவும் பதிக்காத வெள்ளி அல்லது தங்கம் மோதிரத்தை அதில் போட்டு இரவில் மூடி வைக்கவும்.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக,மோதிரத்தை எடுத்து விட்டு அந்த நீரை அருந்தி வர நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.தினசரியும் செய்யலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்


நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்:
பவளம் என்பது ஒரு வகை கடல் வாழ் உயிரினமாகும்.இதில் வெண் பவளம்,செம்பவளம் என்று இரண்டு வகைகள் உண்டு.
யார் அணியலாம்?
செவ்வாய் கிரகத்தின் உலோகம் பவளம்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரக்கள் பவளம் அணிய தெய்வ கடாட்சம் கிட்டும்.கோபம் தணியும்.அதிர்ஷ்டம் உண்டாகும்.
மேலும் இந்த பவளத்தை தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு மோதிரத்தில் பதித்து அணியலாம்.அதேபோல் 54 எண்ணிக்கையில் பவளத்தை எடுத்து மாலையாக கோர்த்து அணிய மேலும் சிறப்பாக இருக்கும்.
பலன்கள்:
°தெய்வ கடாட்சம் கிடைக்கும்
°கோபம்,ரத்த அழுத்தம் குறையும்
°அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்
°வீரம் விவேகம் அதிகரிக்கும்
°செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை,குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அணிய நிவர்த்தி உண்டாகும்
°நிலம்,கட்டிட பணிகள்,ரியல் எஸ்டேட் துறையினர் அணிய சிறப்பான பலன்கள் கிட்டும்.
°மன வலிமை,உடல் வலிமை உண்டாகும்.
°பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்க மாங்கல்யத்துடன் பவளம் சேர்த்து அணிய பலன் கிட்டும்.
ஒரிஜினல் பவளம் கற்கள்,பவள மாலை எங்களிடம் கிடைக்கும்.தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்


இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்:
திரிபலா சூரணம்- ஒரு காய கற்பம்
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே திரிபலா சூரணம்.அறுசுவையில் உப்பைத் தவிர்த்துத் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலாவும் திரிகடுகமும் அற்புதமான சித்த மருந்துகள் ஆகும். சித்தர் கள் உடலை வலுவாக்கவும்,இரத்தத்தை சுத்திகரிக்கவும் இன்று உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Wednesday, November 15, 2017

ஆண்மைக் குறைவு நீங்க,ஆண்மை சக்தி அதிகரிக்க-"மதன காம சூரணம்":


ஆண்மைக் குறைவு நீங்க,ஆண்மை சக்தி அதிகரிக்க-"மதன காம சூரணம்":
விந்தணு குறைப்பாடு,விந்து நீர்த்து போகுதல்,முந்துதல்,ஆண்குறி எழுச்சியின்மை,வளர்ச்சியின்மை,போன்ற அனைத்து விதமான ஆண்மை குறைபாடுகளையும் குணமாக்கும்-இந்த "மதனகாம சூரணம்".
இது 11 மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து 1டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட ஆண்மைக்குறைபாடு நீங்கி போகசக்தியும்,ஆண்மை சக்தியும் அதிகரிக்கும்,குழந்தைப் பேறும் கிட்டும்.
தேவைப்படுவர்களுக்கு கூரியரில் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
"மதனகாம சூரணம்" தேவைக்கு அணுக.
போன்:+917598758989


குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!


குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!
காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி... எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.
உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
"தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டுங்கள்.
மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!
என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். (சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.
ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.
போன்:+917598758989

Tuesday, November 14, 2017

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்


ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை ஸ்ரீ வராஹி யந்திரம் வைத்து 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
மூல மந்திரம்:
"ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"
பூஜை முறைகள்:
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.
இதன் பலன்:
தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Monday, November 13, 2017

பண கஷ்டங்கள் பறந்தோட:


பண கஷ்டங்கள் பறந்தோட:
தினசரி வெள்ளை நிற பூந்தியை புறாக்களுக்கு இட்டு வர பணக் கஷ்டங்கள் பறந்தோடும்,அதிலும் குறிப்பாக வெள்ளை புறாக்களுக்கு இட்டு வர உடனடி பலன் கிட்டும்.
அதேபோல் காக்கைக்கும் இட்டு வர கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

இரசமணி ஓர் அறிமுகம்


இரசமணி ஓர் அறிமுகம்
சிவா பெருமானின் விந்து என்று சொல்லப்படும் பாதரசத்தை மூலிகைகள் மற்றும் உப்புகளாலும் சுத்தி செய்து "ஏழு " சட்டைகளையும் "எட்டு" தோஷங்களையும் நிவர்த்தி செய்து இறுக்கி மணியாக்கி அணிந்து கொள்ள சிவா பெருமானே நம்மோடு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.
"இகுந்து பார்" சூதத்தை(பாதரசம்) எவ்வண்ணதாலும் இறுக்கியவன் "தேவனடா" இடுக்கமில்லை என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
அவ்வளவு மகத்துவம் வாய்ந்த இரசமணி இருக்க நம் எதற்கும் பயப்பட தேவையில்லை. தவிர இது "விதியாளி அறிவான் பாடு" என்று சித்தர்களின் சொல்லுக்கு ஏற்ப யார் இதை பெறுவதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளதோ அவர்களுக்கே கண்டிப்பாக கிடைக்கும்
ரசமணியின் பயன்கள்
வசியரசமணி : முகவசியம், தொழில் வசியம், வியாபார வசியம், சத்தவசியம், ஜனவசியம் முதலியவைகள் இந்த மணியால் சித்தியாகும்.
மோகன வசியம்
மோகனரசமணி : லக்ஷ்மி கடாசியம், ஐஸ்ய்வர்யம் உண்டாகவும் சொத்து பிரேச்சனைகள் தீரவும், கடன் தொல்லையிருந்து விடுபடவும் , கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு நீங்கவும், மேலதிகாரிகள் அன்பாக நடக்கவும் இந்த மோகனரசமணி உதவும்.
உச்சாடான ரசமணி
எதிரிகள் நம்மை விட்டு நீங்கவும் பில்லி , கண்யம், செய்வினை, தாண்டும் குணம் போன்ற தீய மந்திர சக்திகள் தம்மை விட்டு விலகிபோகவும் கொடிய நோய்களும் பூர்வ ஜென்ம பாவங்களும் நம்மை விட்டு விலகிப்போக இந்த உச்சாடான ரசமணி உதவும்.
ஸ்தம்பன ரசமணி
உடல் உறவில் திருப்தி இல்லாதவர்களுக்கு சொப்பன கலிதம், துரித கலிதம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஸ்தம்பன ரசமணி உதவும்
சர்வ வசியம் தரும் - இரசமணி :
முறைப்படி கன்னிநூல் காப்புகட்டி, சாப நிவர்த்தி செய்து கொண்டு வந்த ஜோதிப் புல்லைக் கல்வத்தில் போட்டு மைப்போல் அரைத்துக்கொள்ளவும், ஒரு பலம் பாதரசம் எடுத்து , அரைத்த ஜோதிப்புல் விழுதில் வைத்து, மண் சீலை செய்து பத்து எருவில் ( பசு சாணத்தில் தட்டிய வரட்டி ) புடம் போட்டு, புடம் ஆறிய பின் எடுத்தால் பாதரசம் கெட்டிப்பட்டு கல் போல் இருக்கும். இதற்கு மேல் மீண்டும் ஜோதிப்புல் அரைத்து அதனுள் வைத்து மண்சீலை ( மண் கவசம் ) செய்து பத்து எருவில் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து மீண்டும் இருபது முறை புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை குகையில் வைத்து ஊத உருகி மணியாகும். இதை பால், தேன் இவைகளில் போட்டால் அதை உறிஞ்சி குடிக்கும். இந்த மணியை வாயில் போட்டுக்கொண்டு உமிழ்நீரை சாப்பிட விந்து கட்டும் உடலுறவில் லேசில் விந்து வெளிப்படாது. உடலில் உள்ள தாதுக்கள் கட்டும். நரை, திரை விலகி உடல் காயசித்தி ஆகும்.
இந்த இரசமணியை லட்சம் உரு வசிய மந்திர உரு ஏற்றி வைத்துக் கொண்டால் சர்வ ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம் முதலியன உண்டாகும். இந்த இரசமணியால் - இலட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த இரசமணியை இடுப்பில் கட்டி பெண்ணை புணர்ந்தால் போகசக்தி அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989