Thursday, May 2, 2024

வாலை புவனேஸ்வரி மந்திரம் மந்திரம்


 வாலை புவனேஸ்வரி யந்திரம் மந்திரம்:


மாந்திரீக பாடங்களில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டும் .இந்த வாலை பரமேஸ்வரியால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும் .நீங்கள் இந்த தேவதையை 41விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் இந்த தெய்வத்தின் மூலமாக அநேக காரியங்கள் சாதிக்கலாம் .இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும் குறி சொல்லலாம் முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும் .ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள் .


வாலை புவனேஸ்வரி  

மூலமந்திரம்: 


"அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஸ்ரீயும் றீயும்

வா வா வாலை பரமேஸ்வரி வருக வருக 

வந்து என் நாவிலும் வாக்கிலும் வந்து முன் நிற்க சிவா".


  

பூஜை விதி:


 வளர்பிறை வெள்ளிகிழமை நாளில் யந்திரம் எழுதி பூஜையை துவங்க வேண்டும் .தினம் 108 உரு வீதம் 41 தினங்கள் விரதமிருந்து பூஜை செய்தால் சித்தியாகும் .இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம் சாதகனுக்கு தன வசியம் ,ஜனவசியம் அனைத்தும் சித்தியாகும் .


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

போன்:+91 7598758989



Tuesday, April 30, 2024

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

 

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

செய்வினை,ஏவல் பில்லி சூன்ய பாதிப்புக்கள்,எதிரிகளால் தொல்லைகள்,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து யந்திரத்திற்க்கு பால்,மஞ்சள் நீர்,விபூதி,பன்னீர் இவற்றால் அபிசேகித்து மந்திர உருவேற்றி தாயத்தாக்கி நன்னாளில் குலதெய்வத்தையும்,துர்க்கையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.இதனால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நமக்கு  பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.தாந்த்ரீக யந்திரங்களில் இது மிக உயர்வான பலனைத் தரக்கூடியவை.


பூஜிக்கப்பட்ட தாயத்து,யந்திரம்,ரட்சை கயிறு,குங்குமம் தேவைக்கு அணுகவும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Tuesday, April 16, 2024

சுக்ரபகவான் மந்திரம்



தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |

ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.


வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, April 12, 2024

வறுமை நீங்கி செல்வம் கொழிக்க

 வறுமை நீங்கி செல்வம் கொழிக்க :



வெள்ளிக்கிழமை சுக்ரஹோரையில் ஆரம்பித்து 90 நாட்கள் செய்யவும்.


இரும்பு கலக்காத 90 நாணயங்களை எடுத்துக் கொள்ளவும்.தினமும் ஒரு நாணயம் எடுத்து அதை மஞ்சள் கலந்த நீரால் கழுவி விளக்கின் பாதத்தில் வைத்து ஜபம் முடிந்த பின் விளக்கைக் குளிரவைத்து அல்லது விளக்கு தானாகக்  குளிர்ந்தபின் அந்த நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் வைத்துக்கொள்ளவும்.இது போல் தினமும் செய்து 90 ஆவது நாள் அந்த மஞ்சள் பட்டுத்துணியை முடிச்சுப் போட்டுப் பணம் வைக்கும் பீரோ,கல்லாவில் வைத்துக்கொள்ளவும்.மஞ்சள் பட்டுத்துணியில் முதல் நாள் மட்டும் 4 மூலை மற்றும் நடுவில் கொஞ்சம் வாசனைத்திரவியம் தடவவும் அல்லது பன்னீர் தெளிக்கவும். 


ஜப காலத்தில் கருப்பு நிறம் தவிர்த்து மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும்.மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிறத் துணி மேல் அமர்ந்து ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்


தினம் 108 தடவைக்குக் குறையாமல் வடக்கு அல்லது மேற்கு நோக்கி ஜபித்து வர வறுமை நீங்கி வளவாழ்வு உண்டாகும்.


தாமரை மணி மாலையால் ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்.


மந்திரம் :-


ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் |தாரித்ர்ய வினாசகி| ஜகத் ப்ரசூத்யை நமஹ ||

..........................................................................................

கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.

தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,

குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.

குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,

ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,

பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,

குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,

நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,

நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,

அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,

வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,

வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,

புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,

திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,

கடன் தொல்லைகள் நீங்க,

தகாத உறவுகளை முறிக்க,

கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,

விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,

அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,

சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,

அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள், சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, April 7, 2024

அஷ்ட லட்சுமி காயத்ரி மந்திரம்:


 அஷ்ட லட்சுமி காயத்ரி மந்திரம்:


செல்வத்தின் அதிபதியான லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது. அஷ்ட லட்சுமிகளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் 16 வகை செல்வங்களும் கிடைக்கும்.

    

மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி எப்படி தோன்றினாள். 


தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் கடைந்தனர். அப்போது பாற்கடலிலிருந்து பல அற்புத பொருட்கள் வெளி வந்தன. 

சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியது. அதிலிருந்து தோன்றிய மகா லட்சுமி தேவையை மகா விஷ்ணு மணம் புரிந்தார்.


ஆதிலட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

மஹாசக்தியை ச தீமஹி

தந்நோ ஆதிலக்ஷ்மி ப்ரசோதயாத்


தான்யலட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

மங்கள ரூபிண்யை தீமஹி

தந்நோ தான்யலக்ஷ்மீ ப்ரசோதயாத்


வீர லட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

வீரசக்தையை ச தீமஹி

தந்நோ வீரலக்ஷ்மீ ப்ரசோதயாத்


கஜ லட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

மஹாபலாயை ச தீமஹி

தந்நோ கஜலக்ஷ்மீ ப்ரசோதயாத்


சந்தான லட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

வம்சவர்த்தனாயை தீமஹி

தந்நோ சந்தானலக்ஷ்மீ ப்ரசோதயாத்


விஜய லட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஜயபலதாயை தீமஹி

தந்நோ விஜயலக்ஷ்மீ ப்ரசோதயாத்


வித்யா லட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

சுகீர்த்தனாயை தீமஹி

தந்நோ வித்யாலக்ஷ்மீ ப்ரசோதயாத்


தனலட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

கனகதாராயை தீமஹி

தந்நோ தனலக்ஷ்மீ ப்ரசோதயாத்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, April 5, 2024

12 ராசிக்குரிய வெற்றிலை பரிகாரம்

12 இராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்


12 இராசிக்காரர்களின் துன்பங்களை போக்க வெற்றிலை பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.


மேஷம்:- வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.


ரிஷபம்:- வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.


கன்னி:- வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.


மிதுனம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.


கடகம்:- வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.


சிம்மம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.


துலாம்:- வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.


விருச்சிகம்:- வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.


தனுசு:- வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.


மகரம்:- வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.


கும்பம்:- வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.


மீனம்:- வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

 

Thursday, March 28, 2024

விபத்தை தடுக்க மந்திரம்

 விபத்தை தடுக்க:

வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் முன் ஆஞ்சனேயரை வணங்கி

" ஓம் ரீம் ராம் ராம் ஆஞ்சனேய ராம் ராம் மம சர்வ சத்ரு சங்கட நாசய நாசய ராம் ராம் ஸ்ரீம் ஓம்"


 இந்த மந்திரத்தை ஒன்பது முறை கூறி செல்ல விபத்துக்கள் ஏற்படாது.


தொடர்புக்கு 

 

போன்:+917598758989