Thursday, February 22, 2018

வெற்றி தரும் வசீகர அஞ்சனங்கள்:


வெற்றி தரும் வசீகர அஞ்சனங்கள்:
தங்களுக்கு எதிலும் அதிர்ஷ்டம் இல்லை என குறையுள்ளோர்க்கு,காரியங்கள் முடியும் தருவாயில் வந்து பின் தடையாவோர்க்கு, ஒரு வசீகர சக்தி வேண்டுவோர்க்கு, நம் புராதன தாந்த்ரீக கிரந்தங்களில் பல அஞ்சன முறைகள் கூறப்பட்டு உள்ளது. இவைகளை முறையாக செய்து உபயோகித்தால் வெற்றி நிச்சயம்.
அம்பர், கோரோசனை, ஸஹதேவி வேர், கஸ்தூரி,ஜவ்வாது ,புனுகு,மச்ச கல், பச்சை கற்பூரம்-இவை அனைத்தையும் சம அளவில் சேர்த்து ஒரு மஞ்சள் வஸ்திரத்தில் அமர்ந்து அரைத்து, "ஓம் றீம் ஐயும் கிலியும் சவ்வும் சர்வலோக வசியமாக சுவாகா" என்ற மந்திரத்தை 1008 முறை கூறி, அரச மரத்தில் இருந்து தானாக விழுந்த ஒரு சிறு குச்சியினால் , புருவ மத்தியில் இட்டு செல்ல, காரிய பலிதம் நிச்சயம். இதை வீட்டிற்குள் இருக்கும் சமயம் தரித்தல் கூடாது. இதை வியாழன் அல்லது ஞாயிறு தயாரித்தல் பலன் தரும்.