Thursday, February 8, 2018

ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்


ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்:
இக்கால இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களின் ஆண்மை தன்மையை பற்றிய சந்தேகம் அதிகம் கொண்டுள்ளனர். திருமணதிற்கு முன்பு சுய இன்பம் கொள்ளுதல், தகாத உறவில் ஈடுபடுதல் மற்றும் ஓரினச் சேர்க்கை காரணமாக தங்களால் தாம்பயத்தில் இடுபட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது.
வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே "இப்ப எனக்கு எதுக்கு கல்யாணம்" என்று தள்ளிப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மையில் திருமண ஆசை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட தவறுகளை செய்துவிட்டபடியால் அவர்களால் முழுமையாக துணையை திருப்திபடுத்த முடியுமா என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது.
அடிக்கடி சுய இன்பம் செய்து ஆசையை தீர்த்துக்கொள்பவர்களுக்கு ஆண் குறி சிறுத்து போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனாலேயே திருமணத்தை தள்ளி வைத்து மனதில் வீண் பயத்திற்கு இடம்கொடுத்து விடுகின்றனர்.
"ஆண்மை அதிகரிக்க" என்ற விளம்பரங்களை பார்த்து, அவர்களிடம் சென்று அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். உண்மையில் அதுபோன்ற மருந்துகள் உடனடி நிவாரணியாக மட்டுமே இருக்குமே ஒழிய, நிரந்தர தீர்வை தராது.
மன பயம் தான் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மை தன்மை குறைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்ய கூடாத தவறுகளை செய்த பிறகு திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் கட்டாயபடுத்தும்பொழுதுதான் தங்களால் வீரியத்துடன் செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு சிலரை தவிர, நூற்றில் 99 சதவிகிதனருக்கு மனநோயே இதுபோன்ற ஆண்மை குறைவு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் துணை அருகில் இருக்கும்பொழுது அவர்களுடைய உடலில் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டாலே 100 சதவிகித ஆண்மை அதிகரிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
ஆண்மை தன்மையை சோதிக்கிறேன் பேர்வழி என நண்பர்களின் தவறான வழிகாட்டலில் சிலர், பணத்திற்காக படுக்கும் வேசிகளிடம் செல்வதுண்டு. அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. அதனால் பால்வினை நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அவர்களை தாக்கும் அபாயம் உண்டு. எனவே இதுபோன்ற இழிவான தகாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்க மருந்துகள் உண்டு. "ஓரிதழல் தாமரை சூரணம்" ஆண்மை அதிகரிக்கச் செய்கிறது. இச்சூரணத்தை நீங்களாகவே தயார் செய்து பயன்படுத்தலாம். ஓரிதழல் தாமரை சூரணம் ஆண்மை தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு, உள் காய்ச்சல், TB என்கிற எலும்புருக்கி நோய், காந்தல், உடல் சூடு, சிறுநீர் பாதை ஏற்படும் புண்கள், அவற்றால் ஏற்படும் எரிச்சல் என பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வது எப்படி?
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அதிமதுரம்
ஓரிதழ் தாமரை
சர்க்கரை
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு அவற்றை எடுத்து நீர் விடாமல் அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவகளை மின் சக்தி மூலம் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த கூடாது. அம்மியில் அரைத்து தான் பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பவுடரை அன்றாடம் இருவேளை காலை மாலை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து அருந்தி வர ஆண்மை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். பால் இல்லாவிடின் சிறு நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். தொடரந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும்.
ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம் நம்மிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: +91 7598758989